மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த சந்திரலேகாவின் கீழ் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய நடராஜனை அழைத்து ஜெயலலித்தா தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்ய சொன்னவரும் பண்ரூட்டி ராமச்சந்திரன் தான்.
அதன்பின்தான் நடராஜனின் மனைவி சசிகலாவோடு நட்பு ஏற்ப்பட்டு உடன்பிறவா சகோதரி ஆனார் .
எம்ஜிஆர் மறைவுக்குப்பின் அதிமுக இரண்டாக பிரிந்த போது , ஜெயலலித்தாவை பண்ரூடியார் தலைமையிலான நால்வர் அணிதான் முன்னிலை படுத்தியது .
1996 தேர்தலுக்கு பின் ஜெயலளித்தாவின் அரசியல் வாழ்க்கை சூனியம் ஆகும் நிலை ஏற்ப்பட்டது . 1998 இல் வந்த பாராளுமன்ற தேர்தலில் மருத்துவரோடு கூட்டணி வைத்து , வன்னிய ஓட்டுக்களை பெற்று அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது . தொடர்ந்து 2001 சட்டமன்ற தேர்தலிலும் மருத்துவர் அய்யாவால் வன்னியர் ஆதரவு அதிமுகவிற்கு இருந்தது .
ஆனால் பெரும்பாலும் அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு எந்தவித நன்மையையும் கிடைக்காது என்பது தெரிந்த ஒன்றுதான் . 27 அமைச்சர்கள் இருந்த அவையில் இரண்டு வன்னியர்களுக்குதான் வாய்ப்பு அளிக்க பட்டது .
வன்னியர்கள் மருத்துவர் பின்னால் நின்று நமது ஆதரவை தந்து வெற்றி பெற செய்தாலும், செய்த உதவிகளை மறந்தது ஒரு புறம் என்றால் அதிமுக அரசுதான் வன்னியர் மீது பொய் வழக்கு போட்டதும், மரவெட்டிகள் என்று வன்னியர்களை இழிவாக பேசியதும் ஜெயலலித்தாதான்..
போர் என்று வந்தால் வாளெடுத்து வீசும் சமுதாயம், இன உணர்வு மறந்து எவன் எவன் காலிலோ விழுந்து, அரசியல் சூழ்ச்சிகளால் உரிமை இழந்து நிற்கிறோம் .
No comments:
Post a Comment