Wednesday, October 17, 2012

உடையார்பாளையம் வேலாயுதத்தின் படுகொலை சம்பவம்


திராவிட கழகத்தில் இருந்து பிரிந்த திராவிட முன்னேற்ற கழகம் முதலில் வடதமிழகத்தில்தான் வேரூன்றி வளர தொடங்கியது . இதற்க்கு அடித்தளமாய் அமைந்தது உடையார்பாளையம் வேலாயுதத்தின் படுகொலை சம்பவம் . இவர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு, பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் . இதை சகித்து கொள்ள முடியாத பார்ப்பனர்கள் ஒன்றுகூடி நவம்பர் 13, 1947இல் அவரை கொலை செய்தனர் .

பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், வழக்கு அவர்களுக்கு சாதகமாக இருந்ததோடு அவர்கள் 1949 இல் விடுதலையும் செய்யப்பட்டார்கள்
அப்போது திமுக கட்சியை தொடங்கியிருந்த அண்ணாதுரை , இதை கண்டித்து பல இடத்தில் அவரின் உருவ படத்தை திறந்து வைத்து பிரச்சாரம் செய்தார் . இந்த ஆதரவு குரலால் , திமுக என்பது தங்களுக்கான கழகம் என்று வன்னியர்கள் நம்பி திமுகவில் இணைய தொடங்கினார்கள் .

இதன் விளைவாக திமுக 1957 யில் போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றி பெற்ற 15 தொகுதிகளில் , 14 தொகுதிகள் வன்னியர்களின் பகுதியாக இருந்தது . ஆனால் எந்த வேலாயுதத்தை முன்னிறுத்தி வன்னியர்கள் மத்தியில் ஆதரவை தேடி கொண்டார்களோ, அந்த வேலாயுதத்தை அப்புறம் மறந்து விட்டார்கள் .


1 comment:

  1. நமது உடையார்பாளையம் நகரத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று திருக்குலத்துடனான பெருமாள் கோவில். இது அரண்மனைக்கு சொந்தமானது. இது எப்போது கட்டப்பட்டது என்ற வரலாறு இல்லை. கடைசியாக எப்போது கும்பாபிஷேஹம் நடைபெற்றது என்ற விபரமும் எனக்கு தெரியவில்லை.
    இக்கோவில் மிகவும் சிதலமடைந்து காணப்படுவதால் பெரும்பாலும் இக்கோவில் திறக்கப்படுவதில்லை.
    ஆனாலும் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் முழுவதும் காலை 5.00 மணியளவில் மார்கழி உற்சவம் பூஜை நடைபெறும் போது திரளான பக்தர்கள் கலந்துகொள்வதை பார்த்திருக்கிறேன்
    மேலும் பல்வேறு தருணங்களில் இக்கோவில் திறந்து வைக்கப்பட்டுள்ளதை பார்த்திருக்கிறேன்.

    வருகிற மார்கழி மாதத்தை பூஜைகள் செய்து (மார்கழி உற்சவம்) கொண்டாடிட எதுவாக தற்போது இக்கோவில் உட்புறம் ஓரளவு சரிபடுத்தி தந்திட சில இறையடியார்கள் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்து சம்பளமில்லாமல் பணி தொடங்கியுள்ளனர் ...
    இதுபற்றி எனக்கு தகவல் கூறியவர்.
    எனது இனிய நண்பர் நாதன் டிரேடிங் கம்பெனி -செவ்வேல் 9994961676

    இவர்களுடன் நாமும் சேர்ந்து செயல்படலாம். நீங்கள் எதை செய்தாலும் (பொருளாகவோ, செயலாகவோ) நீங்களாகவே செய்வது இறையருளை இரட்டிப்பாக்கும்.

    ReplyDelete