Wednesday, October 17, 2012

பெரியார் பெரியார்தானா ? ஒரு விவாதம் - "அச்சமில்லை பத்திரிகை " - நா .இறைவன்









பெரியார்
பெரியார்தானா?

------------------------------------------------------------------------------------------

வன்னியர் தலைமையிலான கட்சிகளை
சாதிக்கட்சிகள் - அவமானம்; என்றது குறித்த விவாதம்

கடந்த ஜூலை திங்கள் இறுதியில் ஒருநாள் என்னைத் தொலைபேசியில் அழைத்த திருவான்மியூர் தோழர் புருஷோத்தமன் - காங்கிரசு கட்சியைச் சேர்ந்த கோபண்ணா என்பவர் நடத்தும் ‘தேசிய முரசு’ ஜூலை இதழில் - 1954இல் விடுதலை நாளிதழில் பெரியார் எழுதிய தலையங்கத்தை எடுத்துப் போட்டுள்ளார். 

அந்த இதழை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். அதைப் பார்த்துவிட்டு நீங்கள் அதற்கு மறுப்பு எழுத வேண்டும் என்றார்.

1954இல் பெரியாரின் தலையங்கத்திற்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது எதற்கு மறுப்பு எழுதச் சொல்கிறீர்கள் என்றேன்.

1954இல் எழுதிய தலையங்கத்தை 60 ஆண்டுகளுக்குப்பிறகு வெளியிடும் அவசியம் கோபண்ணாவுக்கு இப்போது இருக்கிறது என்றால்‡

60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த தலையங்கத்திற்கு மறுப்பு எழுத வேண்டிய அவசியம் நமக்கும் இருக்கிறது என்றார்.

இரண்டு நாட்கள் கழித்து - ‘தேசிய முரசு’ இதழ் கூரியரில் வந்தது. அதில் பெரியார் எழுதிய தலையங்கத்தை - அதற்கு கோபண்ணா ரெட்டி எழுதிய முன்னுரையையும் இங்கே மறுவெளியீடு செய்துள்ளோம்


‘‘பெருந்தலைவரை ஆதரித்து
பெரியார் எழுதிய தலையங்கம்’’

1937இல் இருந்து 17 வருட காலம் எந்த காங்கிரசை ஒழித்தே தீருவது என்று பாடுபட்டாரோ; அந்த காங்கிரசு ஆட்சியை ஆதரிக்க தாமாகவே பெரியார் முன்வந்தார்.

காமராஜ் ஆட்சியமைத்த மறுநாளே, பெரியார் கீழ்க்கண்ட தலையங்கத்தை எழுதியுள்ளார்.

‘‘சாதி ஒழிப்புக்கு இது நல்ல தருணம். திரு.காமராசர் அவர்கள் முதலமைச்சராகி இருக்கிறார். அவருக்கு ஜாதியை ஒழிப்பதில் தனி அக்கறை உண்டு என்பது நமக்குத் தெரியும். இதுபற்றிப் பலதடவைப் பேசி இருக்கிறார்.
இப்பேர்பட்டவர், இனி செய்கை மூலம் தன் லட்சியத்தைப் பெறவேண்டும். இதற்கான கால்கோள் விழாவை நடத்திவிட்டார் என்றே நாம் கருதுகிறோம். ஒரு குறிப்பிட்ட சாதிக்காகவே என்று தோன்றிய இரண்டு அரசியல் கட்சிகளைக் கலைத்து விட்டார்.

காங்கிரசு கட்சியையே எதிர்த்து நின்று தேர்தலில் வெற்றி பெற்ற உழைப்பாளர் கட்சி; பொதுநலக் கட்சி ஆகிய இரு கட்சிகளையும் காங்கிரசுக் கட்சிக்கு வெண்சாமரம் வீசும் கட்சிகளாக ஆககிவிட்ட தனித் திறமைக்காகப் பாராட்ட வேண்டும்.

அரசியல் துறையில் இக்காரியம் எப்படிக் கருதப்பட்ட போதிலும்; தனி சாதிக்காக ஒரு அரசியல் கட்சி என்ற அவமானத்தைப் போக்கிவிட்ட வகையில்; சமுதாயத்துறையில் இக்காரியம் வரவேற்கப்பவட வேண்டியதுதான் என்பதே நம் கருத்து.

சாதி ஒழிப்பு உணர்ச்சியை மக்களிடையே பரப்புவதற்கு இது ஒரு நல்ல தருணம். சுயமரியாதைக் காரருக்கும் இது ஒரு நல்ல தருணம். சட்ட திட்டங்கள் மூலம் முதலமைச்சர் இக்காரியத்தைச் சாதிக்கலாம். வழக்கமான பிரச்சாரத்தின் மூலம் சுயமரியாதைக் காரர்கள் இவருக்கு உதவியாக இருக்கலாம்.

புத்தர்கள்; சித்தர்கள்; பிரம்ம சமாஜ் தலைவர்கள்; சமுதாயச் சீர்திருத்தவாதிகள் ஆகிய பலரால் சாதிக்க முடியாத ஒரு காரியத்தை ஒரு சாதாரண முதலமைச்சர் வெற்றிகரமாக செய்து முடிததுவட்டார் என்ற நிலை ஏற்பட்டால்; இந்திய வரலாற்றிலேயே இடம் பெறக்கூடிய சாதனை அல்லவா இது?’’

(15.4.1954 விடுதலை தலையங்கம்)
(தேசிய முரசு மாத இதழ் வெளிட்டபடி)

இந்தத் தலையங்கத்தைப் படித்த பிறகு பெரியார் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் குலைந்து போனதற்கு காரணம்..

வன்னியர் தலைமையிலான கட்சிகளை அடாவடித்தனமாக அவமானமென அவதூறு பேசியதற்காக மட்டுமல்ல-

காமராஜ் நாடாரை புத்தருக்கும் சித்தர்களுக்கும் மேலான ஜாதி ஒழிப்பு வீரரென - பெரியார் - துதிபாடி காமராஜருக்கு பாதபூசை செய்ததன் காரணமாகவும்தான்.

1954இல் பெரியார் எழுதிய  இந்த தலையங்கத்தின் மீது  இப்போது ஏன் விவாதம்?

இந்த விவாதத்திற்கு நாம் காரணமல்ல.

நம்மை உரசி எழுத வைத்த கோபண்ணா ரெட்டியே காரணம்.

ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு- 

வன்னியருக்கு எதிராக வி­ம் கக்கிய பெரியாரின் இந்த நச்சு எழுத்தை தோண்டி எடுத்து -

கோபண்ணா ரெட்டி என்ற தெலுங்கு வந்தேறி தேசிய முரசு என்ற இதழில் இப்போது மறுவெளியீடு செய்தது எதற்காக?

39 ஆண்டுகளுக்கு முன்பு செத்துப்போன பெரியாருக்குப் புகழ் சேர்க்கவா?
36 ஆண்டுகளுக்கு முன்பு செத்துப்போன காமராசநாடாருக்குப் புகழ் சேர்க்கவா?

ஒரு எழவும் இல்லை.

செத்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டி மாரடிக்கும் வெட்டி வேலைகளை எல்லாம் - கோபண்ணா ரெட்டி போன்ற வந்தேறிகள் செய்யமாட்டார்கள்.
பிறகு எதற்கு இந்த மறு வெளியீடு?

வன்னியர் தலைமையில் இன்னமும் கட்சிகள் இருக்கின்றனவே. அவைகள் சில சில வெற்றிகளையும் பெறுகின்றனவே.
அதை ஒழிக்கும் நப்பாசையில்தான்-

பெரியார் அன்று கக்கிய வன்னியர் ஒழிப்பு வி­த்தை - தோண்டி எடுத்து இன்றைய வன்னியர் தலைமையிலான கட்சிகளை ஒழிக்கும் நோக்கோடு வி­ ஊசியாகப் பயன்படுத்தி இருக்கிறார் கோபண்ணாரெட்டி.

வன்னியர் தலைமையில் கட்சிகள் உருவாவதை எந்த வந்தேறியும் தாங்கிக்கொள்ளமாட்டான் என்பதற்கு -

நேற்றைய உதாரணம் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாய்க்கர்
இன்றைய உதாரணம் கோபண்ணா ரெட்டி.

தோழர் புருஷோத்தமன் சொன்னதுபோல-
1954 இல் பெரியாரின் வன்னியர் எதிர்ப்பு நச்சு எழுத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் அவசியம் கோபண்ணா ரெட்டிக்கு இன்றைக்கும் இருக்கிறது என்றால் -

அந்த பெரியாரின் எழுத்தில் புதைந்து கிடக்கும் பித்தலாட்டங்களை தாக்கித் தகர்க்க வேண்டிய அவசியம் இன்றைக்கும் நமக்கு இருக்கிறது என்பதாலேயே இந்த விவாதம் - இந்தக் கட்டுரை.

பெரியாரையும் அவரது சாதி ஒழிப்பு பிரச்சாரத்தையும் காவிரிக்கு வடக்கே உள்ள மாவட்டங்களான வன்னியர் பகுதிதான் வரவேற்றது; சீராட்டியது; பாராட்டியது; வளர்த்தது.

இதில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், பெரியார், அவர் வாழ்ந்த காலத்தில்; தென்மாவட்டங்களில் எத்தனைக் கூட்டங்கள் பேசினார் - வட மாவட்டங்களில் எத்தனைக் கூட்டங்கள் பேசினார் என்று கணக்கெடுத்து தெளியலாம். வடக்கேதான் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட கூட்டங்கள் நடந்திருப்பதையும் அறியலாம்.

தன் மகளுக்கு ‘சாதி’ ஒழிப்பு என்று பெயரிட்ட வன்னியக் கிறுக்கன் ஒருவரை அரியலூர் பகுதியில் சில வருடங்களுக்கு முன் சந்தித்தேன். அந்த பெயருக்காக அந்தப் பெண் எத்தனை கேலியையும் கிண்டலையும் சும்ந்திருப்பாள் என்று எண்ணுகிற போதே நெஞ்சு பதைக்கிறது. இப்படிப்பட்ட முட்டாள் சிறுக்கனை தெற்கே எங்கேயும் காண முடியாது; வடக்கேயும் கூட வன்னயசாதி தவிர மற்ற எந்த சாதிகளிலும் காண முடியாது.

இப்படி கண்மூடித்தனமான பக்தியோடு பெரியாரை ஆதரித்ததற்கு நன்றிக் கடனாகத்தான்; வன்னியர் தலைமையிலான கட்சிகளை சாதிக் கட்சிகள் என்றும்; சாதிக்கு ஒரு கட்சி என்று இருப்பது அவமானம் என்றும் இந்த தலையங்கத்தில் வன்னியருக்கு எதிராக விச­ம் கக்கி இருக்கிறார் பெரியார்.

சாதி உணர்வோடு நாடார்களைப் போல காரியம் செய்து முன்னேறுங்கள் என்ற பெரியார் - சாதிக்கட்சிகள் அவமானம் என்று பேசலாமா?

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி எம்.எல்.ஏ; எம்.பி.களுக்கு 13.3.1952 அன்று பெண்ணாடத்தில் ஈ.வெ.ரா. தலைமையில் பாராட்டுக் கூட்டம் நடை பெற்றது.
எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சிக்கு உடல்நலம் சரியில்லாததால் ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ., வரவேற்றுப் பேசினார்.
.
‘‘வன்னியர்கள் தங்கள் முன்னேற்றம் கருதிதான் சங்கம் அமைத்திருக்கிறோமே தவிர - மற்றவர்களோடு மோதிக் கொள்வதற்கோ வகுப்புவாதம் பேசவோ’’ அல்ல என்று பேசினார் கோவிந்தசாமி.

பின்னர் பெரியார் பேசியது.

‘‘வகுப்புகள் நிலைபெற்று இருக்கும் வரை; அந்தந்த வகுப்பினர் அந்தந்த வகுப்புகளின் உணர்ச்சியுடன், அதாவது வகுப்பு வாதத்துடன் பாடுபட்டால்தான் வகுப்புகள் முன்னேற முடியும்.

உதாரணமாக - 25 ஆண்டுகளுக்கு முன்பு இழிந்திருந்த நாடார் வகுப்பு; அவர்களது வகுப்பு உணர்ச்சி பெற்று; வகுப்பின் அடிப்படையில் காரியம் செய்து வந்ததினால்; இன்று நல்ல நிலையை அடைந்திருக்கிறார்கள் என்றும்;
எனவே பார்ப்பான் -

வகுப்புவாதம் கேவலம் இழிவானது என்று சொல்வதற்கு பயந்து கொண்டு -
நாம் நம்மை வகுப்புவாதிகள் அல்ல என்று சொல்லிக் கொள்வது கோழைத்தனம்.

வகுப்புவாதம்தான்; வகுப்புவாதம் இல்லாவிட்டால் முன்னேற முடியாதே’’ என்று விளக்கினார்.

(22.3.1952 விடுதலை இதழில் பெரியார் பேச்சின் மேற்கண்ட பகுதியை வெளியிட்டுவிட்டு; முழுபேச்சு பின்னர் வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 1952ஆம் ஆண்டு ஏப்ரல் முதலான இதழ்கள் பெரியார் திடலிலேயே இல்லை. அதனால் முழு பேச்சு அதற்கு பின் வெளியானதா இல்லையா என்பது கூடத் தெரியாது).

இப்படி எல்லாம் சாதிகள் அந்தந்த சாதி உணர்வோடு இருக்க வேண்டுமென 1952இல் சாதி உணர்வை நியாயப்படுத்தி பேசிய பெரியார் -

சாதிக்கு ஒரு கட்சி இருப்பது அவமானம் என்றும் அதை ஒழித்த காமராசரின் தனித் திறமையைப் பாராட்ட வேண்டும் என 1954இல் பேசலாமா?

காமராஜ் நாடாரின் ஒடுக்குமுறைக்கும் துரோகத்திற்கும் எதிராக -
வன்னியர் உரிமைகளைக் காக்க உருவானக் கட்சிகள் சாதிக்கட்சிகளா?

எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியார் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட உழைப்பாளர் கட்சியும்; எம்.ஏ.மாணிக்கவேல் நாயகர் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட பொதுநலக் கட்சியும்;

இவ்விரு தலைவர்களின் சாதி வெறி காரணமாகத் தோற்றுவிக்கப்பட்ட சாதிக்கட்சிகள் என்று - பெரியார் போன்ற விபரம் தெரிந்தவர்களும்; விபரம் தெரியாதவர்களும் அவதூறு பேசுகின்றனர்.

உண்மையில்- இவ்விரு கட்சிகளும் தோன்றுவதற்கு-
காங்கிரசுக் கட்சித்தலைவராய் இருந்த காமராஜ் நாடாரின் சாதி வெறியும்; இந்திய விடுதலைப் போராட்ட வன்னிய தியாகிகளுக்கு காமராஜ் நாடார் செய்த துரோகமுமே காரணம் என்பதை விரிவாகப் பார்க்க வேண்டியது அவசியமாகும்..

காமராஜ நாடார் வன்னியருக்கு செய்த துரோகம் குறித்து 1949இலேயே வன்னிய குல மித்திரன் இதழாசிரியரான சுப்பிரமணிய நாயகர் குமுறலைக் கேளுங்கள்

‘‘கோபாலகிருஷ்ண கோகலே அவர்களைப் பின்பற்றி சென்னை வன்னியகுல சத்திரிய மகா சங்கத் தலைவர்களும் நிர்வாகிகளும் காங்கிரஸ் கட்சிக்காகவே உழைத்தனர்.

பின்னர் மகாத்மா காந்தியடிகள் காலத்து வன்னிய சங்கமும்; சங்கத் தலைவர்களும் அவர் வழியையே பின்பற்றி உழைத்தனர். அவர் நடத்திய தென்னாப்பிரிக்க நெட்டால் சத்தியாக்கிரகப் போரிலும்; தென்னாட்டிலும் என்னற்ற வன்னிய தேசாபிமான சிங்கங்கள் சிறை சென்றனர். உயிர் துறந்தனர்,

வன்னியர் இளைஞர்களோ சிறைச்சாலையில் (மற்ற வகுப்பாரைப் போல்) முதல் வகுப்பில் இரண்டாம் வகுப்பில் இருந்துகொண்டு சுகபோகம் அனுபவித்தவர்கள் அல்லர்.

(மூன்றாம் வகுப்புச் சிறையில்) கல் உடைத்தும்; செக்கிழுத்தும்; மிளகாய் பொடி இடித்தும்; கேழ்வரகரைத்தும். க்ஷத்ரியத் தன்மையுடன் தேசத் திருப்பணி செய்தவர்கள்.

சத்தியாக்கிரகப் போரில் - தமிழ்நாட்டில் 1930 முதல் 1942 வரை சிறை சென்ற சுமார் 5700 பேர்களில் 1500 பேர் வன்னியர்கள்.

இது மட்டுமல்ல, தென்னாட்டில் உள்ள எந்த சாதி சங்கங்களும் காந்தியைப் பற்றிப் பிரச்சாரங்கள் எதுவும் செய்வதில்லை. ஆனால் வன்னியர் சங்கம் மட்டும்தான் வன்னிய சங்க உபதேசம் என்ற புத்தகத்தின் மூலம் காந்தியடிகள் பற்றிய பாடல்களையயும்; தேசாபிமானக் கவிகளையும் ஆயிரக்கணக்காக அச்சிட்டு தமிழ்நாட்டில் உள்ளஅநேக கிராமங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தோம். இப்போது காங்கிரசில் மந்திரியாகி உள்ள எந்த வகுப்பாரும் காங்கிரசுக்கு இப்படி உழைத்ததில்லை.

காங்கிரஸ் தோன்றிய காலம் முதல் பெரும் தியாகம் செய்த வகுப்பாகவும்; தென்னாட்டில் சுமார் அரைக்கோடி மக்களாய் உள்ள வீரவன்னியகுல சத்திரியர்களாகிய எங்களை நேற்றுவந்த காமராஜர் ஒதுக்கித்தள்ளி நாடகம் ஆடி வருகிறார்.

கள்ளுக்கடை சாராயக் கடை விற்றவர்களும் காங்கிரசுக்கு எதிர்க்கட்சியாய் இருந்து இன்று கதர் சொக்காய் போட்டுக்கொண்டு காங்கிரஸ் தேசாபிமானிபோல் நடிக்கிறார்கள்.

வன்னியரில் பெரும்பாலோர் (இப்போது) காங்கிரசை எதிர்ப்பதற்கு அச்சமூகத் தலைவர்கள் பலருக்கு காமராசர் கோஷ்டி செய்த பெரும் துரோகமே காரணம் ஆகும்.’’

- 1.9.1949 பல்லவநாடு இதழ்
#####

காங்கிரசும் காமராஜ் நாடாரும் வன்னியருக்கு செய்த துரோகம் குறித்து 1949இலேயே - விழுப்புரம் தென்னவராயன்பட்டு சுதந்திரப்போராட்டத் தியாகி இரா.வேணுகோபால்சாமியின் குமுறலைக் கேளுங்கள்.
தென்னாப்பிரிக்காவில் இன்றும் காங்கிரசு தலைமை பீடத்தை ஏற்று நடத்தி பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாகுபவர் நம் இனப் பெரியவர் டாக்டர் ஜி.எம்.நாயகர் அல்லவா?

1930ஆம் ஆண்டு உப்புச் சத்தியாக் கிரகத்தின் போது; தன் தீப்பொறி பறக்கும் எழுத்தாலும்; வீர எழுச்சியூட்டும் கவிதையாலும்; மக்களைத் தட்டி எழுப்பிய காரணத்தால்; அன்றைய வெள்ளையர் அரசு அச்சுக்கூட ஒழுங்குமுறைச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை புதிதாக இயற்றி அந்த சட்டத்தை வைத்து முதன் முதலில் தடை செய்யப்பட்ட இதழ்; நம் குலக கவிச்சிங்கம்; ராஜரிசி´ அர்த்தநாரீச வர்மா நடத்திய ‘‘வீரபாரதி’’ என்ற இதழல்லவா?

நியாயமாக இன்று இவரல்லவா ஆஸ்தான கவியாகி இருக்க வேண்டும்? ஏன் ஆகவில்லை? அவர் ஒரு வன்னியர் என்பதன்றி வேறு என்ன காரணம்?
வீரபாரதி இதழ் வீரமுழக்கம் செய்த காலத்தில் (1930களில்) நாமக்கல் கவிஞரைத் தமிழகம் அறிந்திருக்குமா? இன்று அவர் எப்படி ஆஸ்தானக் கவியானார் என்பதை நம் குல தேசியவாதிகள் சிந்திக்க வேண்டும்.
அவதிப்படுவது ஒரு குலம்; ஆட்சிபுரிய ஒரு குலமா? பாடுபடுவது ஒரு குலம்; பயனடைவது ஒரு குலமா?

கதர்சட்டை கள்ள மார்கெட்காரர்களின் போர்வையாகிவிட்டது காங்கிரஸ் மானம் போகிறது.

ஆகவே தோழர்களே காங்கிரசு இனி நமக்குத் தேவையில்லை. வன்னியனை எந்த அரசியல் கட்சியும் முன்னேற அனுமதிக்காது.

வன்னியன் தன் அரசியல் உரிமைகளைப் பெற வேண்டுமானால்;
வன்னியன் பிற இனத்திற்கு அடிமைப்படாமல் வாழ வேண்டுமானால்.
வன்னியன் பொருளாதாரத்தில் உயர வேண்டுமானால்
வன்னியனுக்கு வன்னியர் கழகம் தவிர வேறு புகலிடமில்லை.
(17.7.1949 விக்கிரவாண்டி - வாக்கூரில் நடைபெறற தமிழரசர்குல வாலிபர் சங்க முதல் மாநாட்டில் தியாகி வேணுகோபால்சாமி உரையின் ஒரு பகுதி).
####

காங்கிரசின் பேரால்-
ரெட்டியார்களும்; பிள்ளைமார்களும்; முதலியார்களும்; நாயுடுகளும் வன்னியர்மீது செலுத்திய ஆதிக்கத்தை எதிர்த்து வென்ற வன்னியர் குல வாலிபர் சங்க வரலாற்றை அறிஞர் வே.ஆனைமுத்து ‘முன்னேற்ற வந்த மூன்று தலை முறைகள்’ புத்தகத்தில் ஆவணப் படுத்தி யுள்ளார். ஆழ்ந்து படியுங்கள்.

1920 - 1947களில் அரசியல் பதவிகள் என்பவை ஊராட்சி மன்றம்; நகராட்சி மன்றம்; வட்டாட்சி மன்றம்; மாவட்ட ஆட்சி மன்றம்; மற்றும் கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றில் உறுப்பினர் மற்றும் தலைவராக வருவதுதான்.

இவை எல்லாவற்றிலும்-

காங்கிரசின் பேரால்
பேராதிக்கம் செலுத்தியவர்கள்:

தென்னாற்காடு மாவட்டத்தில்: சீத்தாராம் ரெட்டியார்; வேங்கடகிருஷ்ணா ரெட்டியார்; பாஷ்யம் ரெட்டியார்; லெட்சுமி நாராயண ரெட்டியார்; மற்றும் மார்க்கண்டம் பிள்ளை வேணுகோபால் பிள்ளை கனகசபை பிள்ளை முதலானவர்களே.

திருச்சி மாவட்டத்தில்: பெருவளப்பூர் பி.பி.கே ராஜா சிதம்பரம் ரெட்டியார்; திருவானைக்காவல் ராஜா சிதம்பரம் ரெட்டியார்; துறையூர் கிருஷ்ணசாமி ரெட்டியார்; அரும்பாவூர் நாட்டார் மற்றும் அரியலூர் வெங்கடாசலம் பிள்ளை காடூர் நடராசம்பிள்ளை உடையார்பாளையம் பி.நடராசம் பிள்ளை இவர்களே.
வடாற்காடு செங்கற்பட்டு மாவட்டங்களில்: ரெட்டியார்: தொண்டை மண்டல முதலியார்; கம்மவார் நாயுடு கோன்ற வகுப்பாரின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறந்தது.

இத்தகைய மேல்சாதிக்காரர்களின் ஆகிக்கத்திற்கு எதிராக-
1944-1946 கால கட்டத்தில் கடலூரில் அரசர்குல வாலிபர் சங்கம் என்ற அமைப்பை வன்னிய வகுப்பு இளைஞர்கள் நிறுவினர்.

வாழ்வியல் - மற்றும் அரசியல் அமைப்புகளிலும் நிலவிய இந்த மேல்சாதிகளின் ஆதிக்கம் பளிச்சென இவர்களுக்கு தெரிந்தது.
இதன் விளைவாக-

எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியைத் தலைவராகவும்; கடலூர் ஆ.கோவிந்தசாமி; பி.ஜி.நாராயணசாமி ஆகியோர்களைச் செயலாளர்களாகவும் கொண்டு 1946இல் கடலூரில் வன்னியகுல சத்திரியர் சங்கம் மலர்ந்தது.

இதனால் பயன்கள் விளைந்தனவா? ஆம்.
(1) 1949இல் தமிழ்நாட்டில் மாவட்ட மன்றத் தேர்தல் நடந்தது.
தென்னாற்காடு; திருச்சி; தஞ்சை மாவட்டங்களில் வன்னியகுல க்ஷத்திரியர் சங்கம் என்ற அங்கீகாரத்துடனேயே (Officially Recognised) அத்தேர்தலில் போட்டியிட்டனர்.

வன்னியர்கள் நிரம்பிய தென்னாற்காடு மாவட்ட மன்ற உறுப்பினர்களில் சரிபாதிக்கு ஒருவர் குறைவாக - வன்னியகுல சத்திரியர் சங்கம் மாவட்ட மன்ற இடங்களைப் பிடித்தது.

திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களையும்; தஞ்சை மாவட்டத்தில் சில இடங்களையும் பிடித்தது.

காங்கிரசின் பேரால் போட்டியிட்ட மேல்சாதிக்காரர்களுக்கு அப்போதுதான் (முதன் முதலாக) ஓர் அடி விழுந்தது.

வடாற்காடு மாவட்டத்தில் ஏ.எஸ்.அருணாச்சலம் பிள்ளை (வன்னியர்) எம்.ஏ.மாணிக்கவேலு நாயகர்; பிரசங்கமணி கோ.சாரங்கபாணிக் கவுண்டர்; ஆசிரியர் பூ.மு.ஏகாம்பரக் கவுண்டர்; பேரா.யோகசுந்தரம் (கவுண்டர்) போன்றோர் முயற்சியால் மாவட்ட மன்ற தேர்தலில் சில இடங்களைக் கைபபற்றினர்.

இவைகளின் வழியாக -
வன்னியர்களுக்கு அரசியல் களத்தில் ஓர் வெற்றி கிட்டியது. காங்கிரசுக்கும் ஒரு பாடம் கற்பிக்கப்பட்டது.
-(முன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள் புத்தகத்திற்கு அறிஞர் வே.ஆனைமுத்து எழுதிய முன்னுரையிலிருந்து)
###
1952 தேர்தலில் வன்னியர் மீதான காமராஜ நாடாரின் எல்லை மீறிய ஒடுக்குமுறையை எதிர்த்து தோன்றியதே உழைப்பாளர் கட்சியும்; பொதுநலக் கட்சியும் என்பது குறித்து அச்சமில்லைக்கான நேர்காணலில் பதிவு செய்துள்ளார் வன்னிய அடிகளார்..

(வன்னியர் சங்கம் மற்றும் உழைப்பாளர் கட்சி ஆகியவற்றோடு 50 ஆண்டுகால தொடர்புடையவரும்; தனது 72வது வயதிலும் வன்னியர் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வந்தவருமான - வன்னிய அடிகளாரிடம் - வன்னியர் சமூகப் போராட்டங்கள் ; பெற்ற எழுச்சிகள்; வன்னியத்தலைவர்கள் பெற்ற வெற்றிகள்; தோல்விகள்; தவறான முடிவுகள் பற்றிய நேர்காணல் நிகழ்த்தப்பட்டது. அதில் ஒரு பகுதி)
#

அச்சமில்லை: ராமசாமி படையாட்சியார் உழைப்பாளர் கட்சி அமைக்க என்ன காரணம்?

வன்னிய அடிகளார்: இந்தியா சுதந்திரம் அடைந்தபின் 1952இல் நடக்க இருந்த முதல் தேர்தலில் - வன்னியர்களில் இரண்டு பேர்களுக்கு மட்டுமே போட்டியிடும் வாய்ப்பளிக்க காங்கிரஸ் முன்வந்தது. இது காங்கிரசில் இருந்த வன்னிய பிரமுகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ராமசாமி படையாட்சியார்; மாணிக்கவேல் நாயகர்; சேலம் சுந்தர்ராஜன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு டெல்லிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தைச் சந்தித்து தேர்தலில் வன்னியர்களுக்கு அதகப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என வாதாடினார்கள். இவர்களது கோரிக்கையை டெல்லி தலைமையும் ஏற்க மறுத்துவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி படையாட்சியாரும்; மாணிக்கவேல் நாயகரும் தனிக்கட்சி அமைக்கும் முடிவுக்கு வந்தனர்.
-(ஆகஸ்ட் 2000 அச்சமில்லை இதழ்).
#
இந்த நிலையில் 22.9.51 பிற்பகலில் தென்னாற்காடு ஜில்லா வன்னியகுல சங்க நிர்வாகிகள் கூட்டம், மேற்படி சங்கத்தலைவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் தலைமையில், கடலூர் முத்தையா ஹாலில் நடைபெற்றது.
பொதுவாக - வன்னியமக்கள் உழைப்பாளிகள் ஆனபடியால் அவர்களுடைய நலனை உத்தேசித்தும்; இதேபோல் உழைப்பாளிகளாய் இருக்கின்ற இதர சமூகத்தினரின் நலனை உத்தேசித்தும் - தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற பெயரில் ஓர் கட்சி ஏற்படுத்தி அதில் வேட்பாளர்களை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

23.9.51இல் காட்பாடியில் மாணிக்கவேல் நாயகர் தலைமையில் நடந்த சென்னை மாகாண சத்திரிய சங்கக் கூட்டம் நடைபெற்றது. சென்னை மாகாணப் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு சப். கமிட்டி அமைக்க அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி 6.10.1951இல் கடலூரில் மேற்படி சப்.கமிட்டி கூட்டம் நடைபெற்றது. தேர்தல் வி­யமாய் நடைபெற்ற ஆலோசனையில் கட்சிக்கு பெயர் வைப்பது பற்றிய விவாதம் நிகழ்ந்தது.

மாணிக்கவேல் நாயகர் பொதுநலக் கட்சி எனப் பெயர் இருக்க வேண்டுமெனக் கூறினார்.

சேலம் சுப்பிரமணியம் பிற்போக்கு வகுப்பினர் கட்சி என இருக்க வேண்டுமென்றார்.

தென்னாற்காடு ஜில்லா நிர்வாகிகள் உழைப்‡ பாளர் கட்சியயனும் பெயரை வேண்டுமென்றனர்
சென்னை கே.வினாயகம் பிரஜா கட்சியை முன்மொழிந்தார்.
இக்கூட்டத்தில் உழைப்பாளர் கட்சி என்ற பெயருக்கே கூட்டத்தின் தீர்ப்பு கிடைத்தது.

மாணிக்கவேல் நாயகரும்; கே.வினாயகமும் இந்த முடிவை ஏற்காமல் மாணிக்கவேல் நாயகர் பொதுநலக்கட்சியைத் தோற்றுவித்தார். கே.வினாயகம் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் போட்டியிட்டார்.
படையாட்சியார் உழைப்பாளர் கட்சி என்ற பெயரை ஏற்றார்.
(அர்த்த நாரீசவர்மாவின் இதழ் தொகுப்பு - தொகுதி - 17).

தேசியத் தலைவர் என்று முத்திரை குத்தப்பட்ட காமராஜ் நாடார்
சாதிவெறிக்கு உதாரணம்
-------------------------------------------------------------------
1952 பொதுத்தேர்தலின்போது - நாடார்கள் சுமார் 50 சதவீதம் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இல்லை.
இந்த நிலையில்-

1931 சாதிவாரிக் கணக்கெடுப்பின்படி 29,24,014 மக்கள் தொகையைக் கொண்ட வன்னியர் சமூகத்துக்கு நாடாளுமன்றத்துக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என்றும்; சட்ட மன்றத்திற்கு இரண்டு பேர்களுக்கு மட்டுமே தொகுதி ஒதுக்க முடியும் என்றும் கூறி - வன்னியரை அரசியல் ரீதியாக ஒடுக்கிய காமராஜ் நாடார்-

1952 பொதுத்தேர்தலில்-
1.டி.பழலூர் 2.சேரன் மாதேவி 3.ஆலங்குளம் 4.தூத்துக்குடி 5.திருச்செந்தூர் 6.சாத்தான்குளம் 7.விளாத்தி குளம் 8.விருதுநகர் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளை நாடார்களுக்கு ஒதுக்கியதோடு-

1.சங்கரன்கோவில் 2.ஸ்ரீவில் லிபுத்தூர் 3.ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளையும் நாடார் களுக்கு ஒதுக்கினார். இத்தனைக்கும் நாடார்களின் மக்கள் தொகை 1931 கணக்கெடுப்புப் படி 6,73,399 மட்டுமே..

காமராஜ் நாடாரின் சாதி வெறிக்கு நல்ல உதாரணம் இது.

நாடார் மக்கள் தொகைக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விகிதாச்சார அடிப்படையில் வன்னியர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமானால், 8,07,558 மக்கள் தொகை கொண்ட கடலூர் மாவட்டத்திற்கு மட்டுமே 10 சட்டமன்றத் தொகுதிகளையும் 4 நாடாளுமன்றத் தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 29,24,014 மக்கள் தொகையைக் கொண்ட வன்னிய சமூகத்திற்கு; நாடார்களுக்கு ஒதுக்கப்பட்ட விகிதாச்சாரப்படி தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமானால் - 35 சட்டமன்றத் தொகுதிகளும்; 13 நாடாளுமன்றத் தொகுதிகளும் ஒதுக்க வேண்டும்.

நாடாளுமன்ற தொகுதி ஒன்று கூட ஒதுக்க முடியாது என்றும்; சட்ட மன்றத் தொகுதி இரண்டே இரண்டு தான் ஒதுக்க முடியும் என்கிறார் காமராஜ் நாடார்.
காமராஜ் நாடாரின் வன்னியர் ஒடுக்கு முறைக்கும்; துரோகத்திற்கும் இது உதாரணம்.

வன்னிய சாதித் தலைவர்கள் என்று
முத்திரை குத்தப்பட்ட
ராமசாமிப் படையாட்சியார்
மாணிக்கவேல் நாயகர் ஆகியோரின்
சாதி கடந்த செயல்பாட்டிற்கு உதாரணம்
---------------------------------------------------------------------
இந்தக் கட்சிகள் சாதிக் கட்சிகளாக செயல்படவில்லை என்பதற்கான உதாரணம்:

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்; மாணிக்கவேல் நாயகர் என்ற வன்னியர் தலைமையில் இவ்விரு கட்சிகளும் தோன்றினாலும் - இவைகள் மற்ற கட்சிகளைப் போலவே வன்னியர் மடடுமல்லா மல் மற்ற சாதியார்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றி பெற வைத்தன.

உழைப்பாளர் கட்சியில் 29 பேர்கள் சட்டமன்றத்திற்கும்; 6 பேர் நாடாளுமன்றத்திற்கும் போட்டியிடுகின்றனர்.

19 பேர் சட்டமன்றத்திற்கு வெற்றி பெறுகின்றனர். இதில் 11 வன்னியர் 6 தாழ்த்தப்பட்டோர். திருக்கோவிலூர் தொகுதியில் முத்துக்குமாரசாமி என்ற ஒரு நாயுடு; புதுக்கோட்டையில் வென்ற பாலகிருஷ்ணன் (சாதி தெரியவில்லை).

6 பேர் நாடாளுமன்றத்திற்கு நின்றதில்: 1 வன்னியரும் 1 தலித்தும் தோல்வி அடைந்தனர் வெற்றி பெற்ற நால்வரில் 3 பேர் வன்னியர், ஒருவர் தலித்.
பொதுநலக்கட்சி:

3பேர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெறுகின்றனர். காஞ்சிபுரம் தொகுதியில் டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி முதலியார் வெற்றி பெறுகிறார் மற்ற இருவரும் வன்னியர்.

வன்னியர் 7 பேர் சட்ட மன்ற உறுப்பினராகின்றனர்.
இவ்விரு கட்சிகளிலும் வன்னியர்களை மட்டுமே வேட்பாளர்கள் அல்லர். தலித்துகள்; முதலியார்; நாயுடு; உடையார் போன்றவர்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு, பல சாதியினரும் வெற்றி பெற்றுள்ளனர்.
எனவே இவ்விரு கட்சிகளையும்-

சாதிக்கட்சிகள் என பெரியார் கூறுவது மடத்தனமானது; பித்தலாட்டமானது.
இவ்விரு தலைவர்களும்; கட்சிகளும் சாதி கடந்த செயல்பாடுடையவர்கள் என்பதற்கு மேற்கண்டவைகளே உதாரணம்.
காங்கிரசுக்கு கல்லறை கட்ட சொன்ன பெரியார்
அக்கட்சிக்கு

உழைப்பாளர் கட்சியையும்; பொதுநலக் கட்சியையும்
வெண்சாமரம் வீசும் கட்சிகளாக்கிய
காமராசர் திறமையைப் பாராட்டிப் பேசலாமா?

1.காங்கிரசை ஒழித்துக்கட்ட தக்க சமயம் வந்து விட்டது. காங்கிரசுக்காரர் ஓட்டுப்பெட்டியில் ஆளுக்கொரு பிடி மண் அள்ளிப் போடுங்கள்
-24.10.1951 விடுதலையில் பெரியார்

2.காங்கிரசுக் கட்சிக்கு யார் வேட்பாளர்களாக இருந்தாலும் ஓட்டு செய்யாதீர்கள்
-25.10.1951 விடுதலையில் பெரியார்

3.காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்பதே தி.க.வின் ஒரே லட்சியம்
-15.11.1951 விடுதலையில் பெரியார்

4.இந்த தேர்தலில் காங்கிரசை 500 அடி ஆழத்தில் புதையுங்கள்
-21.11.1951 விடுதலையில் பெரியார்

5.நாட்டில் பலாத்காரம் ஏற்படாமல் இருக்க காங்கிரசு ஒழிய வேண்டும்.
-24.11.1951 விடுதலையில் பெரியார்

6.காங்கிரசு அபேட்சகர்களைத் தோல்வியுறச் செய்வதே கழகத்தின் குறிக்கோள். தி.க.நிர்வாகக் கமிட்டி தீர்மானம்.
-27.11.1951 விடுதலை

7.காங்கிரசை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நமது லட்சியம்.
-14.12.1951 விடுதலையில் பெரியார்.

8.கிடைத்த தடியைக் கொண்டு காங்கிரஸ் என்ற ஆதிசே­ன் பாம்பை அடித்துக் கொல்லுங்கள்
-22.12.1951 விடுதலை தலையங்கம்.

9.சென்னையில் காங்கிரசுக்கு கல்லறை.
-8.1.1952 விடுதலைச் செய்தி

10.புதைக்கப்பட்ட காங்கிரசுக்கு கருமாதி செய்து கல்லறை கட்டப்போகும் நற்செய்தி.
-9.1.1952 விடுதலையில் பெரியார்

11.பிணத்துக்கு திருமணம்
ஆட்சியமைக்க முடியாத அளவுக்கு தோற்றுப்போனபின் குறுக்கு வழியில் ஆட்சியமைக்க காங்கிரசு முயன்றதைக் கண்டித்து பெரியார் விடுதலையில் எழுதிய தலையங்கத்தின் தலைப்பு இது.
-21.3.1952 விடுதலை.
மாட்டுப்பெட்டிக்கு மறந்தும் ஓட்டுப் போடாதீர்கள்.
(விடுதலையில் தினம் தினம் வெளியிடப்பட்ட பெட்டிச் செய்தி)

இப்படி எல்லாம்-
காங்கிரசு செத்த பிணம் என்றும்; 500 அடி ஆழத்தில் புதையுங்கள் என்றும்; கருமாதி செய்து கல்லறை கட்டுங்கள் என்றும் 1951இல் பேசிய பெரியார்‡
உழைப்பாளர் கட்சியையும்; பொதுநலக் கட்சியையும் செத்த பிணமான காங்கிரஸ் கட்சிக்கு வெண்சாமரம் வீச வைத்துவிட்டாயே பாவி; நீ உருப்படுவாயா. நாசமாய் போ என்றெல்லாம் ஆத்திரம் கொண்டு சபிப்பதற்கு பதிலாக

காங்கிரயையே எதிர்த்து வென்ற உழைப்பாளர் கட்சியையும்; பொதுநலக் கட்சியையும் காங்கிரசுக்கு வெண்சாமரம் வீசும் கட்சிகளாக்கி விட்ட தனித்திறமைக்காக காமராசரைப் பாராட்ட வேண்டும் என்று பேசலாமா?
இதனாலன்றோ

நாங்கள் ஒன்றும் வெத்தலைப் பாக்கு வைத்து எங்களை ஆதரியுங்கள் என அழைக்கவில்லை. பெரியார் தாமாகவே முன்வந்து காமராஜ் ஆட்சி அமைத்த முறுநாளே 17 வருடமாக எதிர்த்த காங்கிரசையும்; காங்கிரசு ஆட்சியையும் ஆதரித்தார் என உமிழாமல் உமிழ்கிறார் கோபண்ணா ரெட்டி.

காமராசர் என்னும் விச­ப்பல்லைப்
பிடுங்கி எறியச் சொன்ன பெரியார் -
அவரை புத்தருக்கும், சித்தர்களுக்கும் மேலான
சாதி ஒழிப்பு வீரர் என அடிதொழலாமா?
--------------------------------------------------------------------------------------------
எட்டு விச­ப்பற்கள்
(விடுதலை தலையங்கத்தின் தலைப்பு இது)
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஒரு சில முக்கியமான காங்கிரசு தலைவர்களையாவது அவசியம் தோற்கடிக்க வேண்டும். இது மிக மிக இன்றியமையாதது ஆகும்.

கீழ்க்கண்டவர்களைத் தோற்கடித்தால் காங்கிரசின் விச­ப்பற்களைப் பிடுங்கியது போலாகும் என்பது நமது கருத்து.
1.காமராசு
2.டி.கே.கிருஷ்ணமாச்சாரி
3.சந்தானம் அய்யங்கார்
4.ராம்நாத் கோயங்கா
5.பக்தவச்சலனார்
6.ஆலாஸ்யம் அய்யர்
7.தேனி தியாகராஜன்
8.குமாரசாமி ராஜா
முரட்டுக்காளைக் கொம்புகளை நறுக்கிவிட்டு தீய்த்துவிடுகிற மாதிரி பொதுமக்கள் இவர்களைக் கூர்ந்து கவனிக்க (ஒழிக்க) வேண்டும். அலட்சியம் கூடாது.

இந்த எட்டு பேரும் டெபாசிட் தொகையை இழக்கடிக்கப்படும் அளவுக்கு தோற்கடிக்கப் படுவார்களானால்; தமிழர்களுக்கு நல்ல அரசியல் அறிவு வந்துவிட்டதாகக் கருதலாம்.

இந்த எட்டு பேர் மட்டும் எப்படியாவது தோற்கடிக்கப்பட்டே தீர வேண்டும். வெறும் தோல்வி மட்டும் போதாது. டெப்பாசிட் போகிற மாதிரியான தோல்வியாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் காங்கிரசு எதிர்ப்பு சக்தி முழுவதும் இந்த எட்டு இடங்களில் ஒன்றுதிரண்டு நிற்க வேண்டும்.
-18.12.1951 விடுதலை தலையங்கம்.

தமிழ்நாட்டு சர்வாதிகாரி காமராசர்.
1.2.1952 விடுதலை
காமராசர் தொடர்ந்து பல ஆண்டுகள் நிரந்தர தலைவராக இருக்கக் கருதுவது சரியல்ல.

காமராசர் காங்கிரசை ஒழித்துக்கட்ட தம்மாலான சேவையைச் செய்துவிட்டார். இனி மற்றவர்கள் யாராவது வந்து காங்கிரசின் இறுதி கடனைச் செய்துவிட்டு போவதுதான் நல்லது.

விடுதலை.........
சாதி ஆதரவில் நிரந்தர தலைவராக முயல்வது சரியல்ல.
விடுதலை.....

இப்படி எல்லாம்-
பிடுங்கி எறிய வேண்டிய நம்பர் 1 வி­சப்பல் என்றும் சர்வாதிகாரி என்றும்; சாதி ஆதரவில் நிரந்தர தலைவராக முயன்றவர் என்றும் காமராசர் பற்றி 1951இல் பேசிய பெரியார்-

1954இல் சாதி ஒழிப்பு வீரர் என்றும்; புத்தருக்கும் சித்தருக்கும் மேலாக வரலாறு படைக்கப் போகிறவர் என்றும் பெரியார் பேசுகிறார்.

------------------------------------  "அச்சமில்லை பத்திரிகை " - நா .இறைவன்

1 comment:

  1. it is gopannas view, so that dont think all the reddiars are against vanniyars...it is wrong..when dr. ramadas came to our reddiar function in omandur, he praised us rediars generally, -THAAM UNDU THAM VELAI UNDU ENDRU IRUPPAVARGAL,,AVARGHAL IRUKKUM IDAM ENTHA PROBLEM-UM IRUKATHU--THANKS DR-IYYA

    ReplyDelete